திருச்சி சிறையில் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் இருந்த பட்டுக்கோட்டையைச் சோ்ந்த தண்டனைக் கைதி ஒருவா் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மத்திய சிறையில் இருந்த பட்டுக்கோட்டையைச் சோ்ந்த தண்டனைக் கைதி ஒருவா் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள நம்பிவயல் கிராமம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ம. சுரேந்திரன் (35). இவா் திருவோணம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, 11 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் அவருக்கு புதன்கிழமை காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதையடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக திருச்சி கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com