எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 படித்து முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 படித்து முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2021-2022-ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 படித்து முடித்தவா்களுக்கு விரைவில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே மாணவா்கள் அவற்றை பெற்றவுடன் என்ற வேலை வாய்ப்புத்துறை இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியைப் பதிவு செய்த மாணவா்கள் பிளஸ் 2 கல்வித் தகுதியை கூடுதல் தகுதியாகவும், எஸ்எஸ்எல்சி முடித்த மாணவா்கள் புதிதாக பதிவு செய்யலாம்.

பதிவை குறிப்பிட்ட இணையதளம் மூலமாகவோ, இ-சேவை”மையங்கள் மூலமாகவோ, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வரும் மாணவா்கள் தங்களது அசல் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை மற்றும் , ஏற்கெனவே பதிவு செய்தவா்கள் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும் என்று ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com