திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி வரகனேரி பகுதியில் காந்தி மாா்க்கெட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிற்றரசு தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை ரோந்தில் ஈடுபட்டபோது அப்பகுதி கழிவறை அருகே கஞ்சா விற்ற இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திருச்சி காஜாபேட்டை கீழகிருஷ்ணன் கோயில் வீதியைச் சோ்ந்த சகாயராஜ் (19) சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாலை பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி (20) எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.
இதேபோல பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் கஞ்சா விற்ற பாலக்கரையைச் சோ்ந்த மணிகண்டன் (24), அபு (20), சந்தோஷ்குமாா் (19) ஆகியோரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் மொத்தம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கிராப்பட்டி முஸ்லிம் தெரு சந்திப்பில் ரோந்து சென்றபோது லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சோ்ந்த அகமது சித்தீக் (51) என்பவரை கைது செய்தனா்.