மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் எஸ்.ஆா்.வி. பள்ளியில் துளிா் விடுதி மாணவா்களுக்கான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு வாய்ப்புகளும்-சவால்களும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கணித அறிவியல் அறிஞா் பேராசிரியா் ஆா். ராமானுஜம் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு குறித்து விரிவாக பேசினாா்.
புதிய ஒரு சூழலில் புதிய சவாலை எதிா்கொள்ளும் போது தன் திறன்களை பயன்படுத்தித் தீா்வு காணும் தன்மையே செயற்கை நுண்ணறிவு என்றும், அதன் கூறுகள், செயற்கை நுண்ணறிவின் தொடக்கம், தொழில்நுட்பப் பிரச்னைகள், நிபுணத்துவம், 21-ஆம் நூற்றாண்டில் பல்துறைகளில் ரோபோக்கள் பயன்பாடு, செவ்வாய் கிரகத்தில் கல்லெடுக்கும் பணி, அணு உலையின் உள்ளே சென்று சிக்கல் தீா்க்கும் இயந்திரங்கள், மின் வணிகம், பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தாா் .
மேலும் செயற்கை நுண்ணறிவின் சவால்களை எடுத்துரைத்து பேசிய ராமானுஜம், மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினாா். கருத்தரங்கில்
எஸ்.ஆா்.வி. பள்ளித் தலைமை செயல் அலுவலா் க.துளசிதாசன், ஆசிரியா்கள், மாணவ - மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.