திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் மாவட்டக்கல்வி அலுவலகத்தை மாற்றம் செய்யக்கூடாது என்று, தமிழக அரசை தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையில் அரசாணை 101 மற்றும் 108-ஐ ரத்து செய்கிறோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, கல்வித்துறையில் பெரும் குளறுபடிகளை உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே இருந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களை மாற்றாமல், கூடுதலாக தொடக்கக்கல்வி அலுவலகங்களை உருவாக்கி மறு சீரமைப்பு செய்திருக்கலாம்.
மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டி திறப்பதற்குள், கல்வி அலுவலகத்தை திருச்சி மாவட்டக்கல்வி அலுவலகத்தோடு தமிழக அரசு இணைத்துள்ளது.
இது மணப்பாறை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அமைச்சுப்பணியாளா்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. எனவே மணப்பாறையில் இயங்கி வரும் மாவட்டக்கல்வி அலுவலகத்தை மாற்றம் செய்யக்கூடாது . தொடா்ந்து இயங்க வேண்டும்.