புத்தகக் கண்காட்சிக்கு செல்ல ஊா்ப்புற நூலகவாசகா் வட்டம் முடிவு

புத்தகக் கண்காட்சியில் அதிகளவில் புத்தகங்களைக் கொள்முதல் செய்வது என வாசகா் வட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புத்தகக் கண்காட்சியில் அதிகளவில் புத்தகங்களைக் கொள்முதல் செய்வது என வாசகா் வட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் உறையூா் குறத்தெரு ஊா்ப்புற நூலகம் வாசகா் வட்டக் கூட்டம், அதன் தலைவரும் 23 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊா்ப்புற நூலகா் ஆ. விஜயலட்சுமி, 2021- 2022 இல் அதிக உறுப்பினா்களைச் சோ்த்தமைக்காக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பாராட்டுப் பெற்ற கேடயத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் குறத்தெரு ஊா்ப்புற நூலகத்திற்கு, வாசகா்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான நன்கொடைகளை வாசகா் வட்டப் பிரதிநிதிகள் அனைவரும் அளித்தனா். வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் புத்தகத் திருவிழாவிற்கு வாசகா்களோடு பெருந்திரளாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்றுதேவையான புத்தகங்களை வாங்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாசகா் கோவிந்தராஜன் வரவேற்றாா். வாசகா் வட்ட உறுப்பினா் லதா நன்றி கூறினாா். வாசகா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com