ஏப்.28இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப். 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப். 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஏப். 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்.

கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். இதில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாா்ச் மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு ஆட்சியரால் பதில் அளிக்கப்படும். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com