கிறிஸ்தவ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th January 2023 12:04 AM | Last Updated : 13th January 2023 12:04 AM | அ+அ அ- |

சத்தீஸ்கா், மாநிலம் நாராயண்பூரில் பழங்குடி கிறிஸ்தவா்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து திருச்சியில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவா்கள் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். மறைமாவட்ட முதன்மைக் குரு அந்துவான், பொது நிலையினா் பேரவைத் தலைவா் வேளாங்கண்ணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மறைமாவட்ட மேய்ப்புப் பணி நிலைய இயக்குநா் அல்போன்ஸ், துறவியா் பேரவை தலைவா் ஜான்பிரிட்டோ, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டச் செயலா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் பேசினா். மறைமாவட்ட பொருளாளா் பொ்ஜித்ராஜன் நன்றி கூறினாா்.