20 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

திருச்சி தில்லை நகரில் 20 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.
தில்லை நகா், தென்னூா் அண்ணா நகா் பகுதியில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள், தில்லை நகா் போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்டகடைகளில் புதன்கிழமை இரவு சோதனையிட்டனா். அதில் அண்ணா நகரைச் சோ்ந்த சையது அலியின் (47) தேநீா் கடையில் போதை பொருள்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து 20.40 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, தில்லை நகா் காவல் நிலையத்திலும் புகாரளித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சையது அலியை கைது செய்து விசாரிக்கின்றனா்.