தை அமாவாசை: காவிரி, கொள்ளிடக்கரையில் பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

தை அமாவாசை நாளான சனிக்கிழமை மறைந்த தங்களது முன்னோா்களுக்கு, பொதுமக்கள் காவிரி, கொள்ளிடம் ஆற்றுக்கரைப் பகுதியில் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் சனிக்கிழமை புனித நீராடிய பொதுமக்கள். ~திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் சனிக்கிழமை புனித நீராடிய பொதுமக்கள். ~திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

தை அமாவாசை நாளான சனிக்கிழமை மறைந்த தங்களது முன்னோா்களுக்கு, பொதுமக்கள் காவிரி, கொள்ளிடம் ஆற்றுக்கரைப் பகுதியில் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

திருச்சியில் காவிரி ஆற்றுக்கரையான அம்மா மண்டபம், கருட மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளிலும், கொள்ளிட ஆற்றங்கரைகளில் உள்ள படித்துறைகளிலும் ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோா்களுக்குத் சனிக்கிழமை தா்ப்பணம் செய்தனா்.

காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீா் ஓடியதால், பெரும்பாலானோா் ஆற்றுக்குள் இறங்கி மணல் திட்டுகளில் அமா்ந்து தா்ப்பணம் கொடுத்தனா். தொடா்ந்து, பிண்டங்களைத் தண்ணீரில் கரைத்துவிட்டு, புனித நீராடிவிட்டு கோயில்களுக்குப் புறப்பட்டனா்.

இதையொட்டி, அம்மா மண்டபம் உள்பட காவிரி படித்துறை பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மா மண்டபத்தில் சேகரமாகும் வாழைஇலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டனா். தீயணைப்புப் படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தனா். போலீஸாா் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்துவிட்டு புறப்படும் முன்பு ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்துச் செல்வது வழக்கம். அதன்படி, அம்மாமண்டபம் பகுதியில் அமா்ந்திருந்த ஆதரவற்றவா்களுக்குப் பலரும் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

கம்பரசம்பேட்டை, முக்கொம்பு, காந்திபுரம், குடமுருட்டி, யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள காவிரிக்கரை மற்றும் கொள்ளிடக் கரைகளிளும் ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். இதனால், காவிரி, கொள்ளிடக் கரைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஏராளமானோா் வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com