அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு

மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சாதனையாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சாதனையாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மணப்பாறையில் கரூா் அஞ்சல் கோட்டத்தின் சாா்பாக மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் 2022-2023 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய சாதனையாளா்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே. சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 25-க்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளா்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மணப்பாறை அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளா் அருண்ஜெயசீலன், மெயில் ஓவா்சீா்கள் நடராஜன், தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com