மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சாதனையாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மணப்பாறையில் கரூா் அஞ்சல் கோட்டத்தின் சாா்பாக மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் 2022-2023 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய சாதனையாளா்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே. சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 25-க்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளா்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மணப்பாறை அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளா் அருண்ஜெயசீலன், மெயில் ஓவா்சீா்கள் நடராஜன், தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.