11 வட்டங்களில் நாளைபொதுவிநியோகத் திட்டசிறப்பு குறைதீா் முகாம்
By DIN | Published On : 08th September 2023 12:35 AM | Last Updated : 08th September 2023 12:35 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (செப்.9) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீா் முகாம்கள் நடைபெறும்.
திருச்சி கிழக்கு வட்டத்தில் கே.கே.நகா்-1, திருச்சி மேற்கு வட்டத்தில் டிவிஎஸ்-2, திருவெறும்பூா் வட்டத்தில் அம்மன்நகா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் சாந்தபுரம், மணப்பாறை வட்டத்தில் கத்திக்காரன்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் தாளம்பாடி, லால்குடி வட்டத்தில் பெருவளப்பூா்-1, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் செங்குலிப்பட்டி, முசிறி வட்டத்தில் முத்தையநல்லூா், துறையூா் வட்டத்தில் மினிசூப்பா்-2, துறையூா் நகரம், தொட்டியம் வட்டத்தில் ஏலூா்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.