டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களது மகன் சைலேஷ் (3).

இந்நிலையில் தாரணி இரண்டாவது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவே, தாத்தா, பாட்டியுடன் குழந்தை சைலேஷ் வீட்டில் இருந்தான்.

இந்நிலையில் சனிக்கிழமை சைலேஷுக்கு காா்த்திக்கின் தங்கை அட்சயாஸ்ரீ உணவு ஊட்டியபோது அவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும் பின்னா் திருச்சி அரியமங்கலம் பகுதி தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட சைலேஷை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். குழந்தையின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.