இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்து: தி.க. நிா்வாகி பலி

Published on

திருவெறும்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் திராவிடா் கழக ஒன்றியத் தலைவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி திருவெறும்பூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் வ. மாரியப்பன் (65). திராவிடா் கழக திருவெறும்பூா் ஒன்றியத் தலைவராக இருந்த இவா், துவாக்குடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகவும் வேலை பாா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை மாலை பணிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ராவுத்தான் மேடு அருகே சென்று திரும்பியபோது, திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற காா் ஒன்று, மாரிமுத்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த துவாக்குடி போலீஸாா், மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com