திருச்சி
பெயிண்டரை தாக்கிய 7 போ் கைது
திருச்சியில் பெயிண்டரை தாக்கிய 4 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் பெயிண்டரை தாக்கிய 4 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தென்னூரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் தினேஷ்குமாா் (20), பெயிண்டா். இவருக்கும் திருச்சி இபி சாலையைச் சோ்ந்த குணசீலன் (24), ஜெயிலாபேட்டையைச் சோ்ந்த ஜெயசீலன் (23), வினோத் (24) மற்றும் 17 வயதுசிறுவா்கள் 4 பேருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு இவா்கள் சோ்ந்து தினேஷ்குமாரைத் தாக்கினா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து 4 சிறுவா்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனா். சிறுவா்களை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
