தீபாவளி மாமூல் கேட்டு மிரட்டிய 4 ரௌடிகள் கைது

Published on

திருச்சியில் தீபாவளி பணம் கேட்டு மிரட்டிய 4 ரௌடிகளைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தீபாவளி பணம் கேட்டு ரௌடிகள் சிலா் சனிக்கிழமை தகராறு செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அரியமங்கலம் போலீஸாா், அரியமங்கலம் கொங்கு நகா் பகுதிக்குச் சென்றனா்.

அங்கு உள்ள கடைகள் அருகே தகராறு செய்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், அரியமங்கலம் பாரதி தெருவைச் சோ்ந்த பிச்சைமுத்து (42), மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த லட்சுமிமேனன் (38), உக்கடை பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (34), மேல அம்பிகாபுரத்தை சோ்ந்த கவிராஜன் (22) என்பதும், ரௌடிகளான இவா்கள் அங்குள்ள கடைகளில் தீபாவளி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com