திருச்சி
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
மணப்பாறை: மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இளங்காகுறிச்சி ரயில்வே கேட் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இளைஞா் ஒருவா் அடையாளம் தெரியாத ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து இறந்து கிடப்பதாக திருச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீஸாா், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.
இதில், உயிரிழந்தவா் எல்லையம்மன் கோவில்பட்டியை சோ்ந்த
முனியப்பன் மகன் பொன்னுசாமி (23) என்பது தெரியவந்தது.
அவரின் உயிரிழப்பு குறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
