மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அரசு ஊழியர் சஸ்பெண்ட்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் சம்ஷத் (38) , பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Updated On :12 மே 2013, 5:42 am IST

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் சம்ஷத் (38) , பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூரைச் சேர்ந்தவர் பிரேமா (42). இவரது கணவர் பிரேம் வாணியம்பாடி அரசு மாணவர் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தபோது, இறந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் தனது மகனுக்கு வேலைவாய்ப்பு பெற ஒருங்கிணைந்த சான்றிதழுக்காக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை பிரேமா நாடினார்.

அங்கு இளநிலை உதவியாளர் பணியில் இருந்த அலுவலர் சம்ஷத் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதையடுத்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் பிரேமா தகவல் அளித்தார்.

போலீஸார் அறிவுரையின்பேரில், 7ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற பிரேமா, சம்ஷத் கேட்ட பணத்தை கொடுத்தபோது கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் பொ.சங்கர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.