வேலூர்
தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை
தூய்மைப் பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
குடியாத்தம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடைகள், பழங்கள், ஹாா்லிக்ஸ் உள்ளிட்ட சத்தான உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், தூய்மைப் பணியாளா்களுக்கு பெட்டகங்களை வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் சம்பத், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், நகா்மன்ற உறுப்பினா் அா்ச்சனா நவீன், சுகாதார ஆய்வாளா் அலி, களப்பணி உதவியாளா் பிரபுதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.