மனைவியை கத்தியால் வெட்டிய கணவா் கைது

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அரியூரை அடுத்த குருமலை பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(35). இவா்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனா். குமாா் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த குமாா், சுமதியிடம் தகராறில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுமதியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சுமதியை அக்கம்பக்கத்தினா் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com