குடியாத்தம் சுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சிக்குப்பின் வேலுடன் சுப்பிரமணியா்.
குடியாத்தம் சுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சிக்குப்பின் வேலுடன் சுப்பிரமணியா்.

சுப்பிரமணியா் கோயிலில் சூரசம்ஹாரம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு சூரசம்ஹாரம்
Published on

குடியாத்தம்: குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், மாலை 5 மணிக்கு ஆட்டு கிடா வாகனத்தில் ஜெயந்திநாதா் அலங்காரம், 6 மணிக்கு சூரசம்ஹாரம் எனும் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து 7 மணிக்கு சுவாமிகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் கே.எம்.மகாலிங்கம், விழா ஒருங்கிணைப்பாளா் எம்.சரவணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com