முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்
சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோயில் தீமிதி திருவிழா
By DIN | Published On : 18th May 2019 08:02 AM | Last Updated : 18th May 2019 08:02 AM | அ+அ அ- |

செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் (எ)ரேணுகாம்பாள் கோயில் பிரமோத்ஸவ விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை செஞ்சி மாரியம்மன் கோயில் குளக்கரையில் இருந்து சக்தி கிரகம் ஜோடித்து எடுத்து வரப்பட்டு ரேணுகாம்பாள் கோயிலை அடைந்தது.
பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் மடியில் நெருப்பு கட்டி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, விரதம் கடைப்பிடித்து வந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.