முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்
டெங்கு தினம்: உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 18th May 2019 08:01 AM | Last Updated : 18th May 2019 08:01 AM | அ+அ அ- |

எடுத்தவாய்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் சிந்துஜா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் வரவேற்றார். டெங்கு காய்ச்சல் குறித்து இளநிலை பூச்சியியல் வல்லுவர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையர் மகாலிங்கம், மருத்துவர் சாரா, மேற்பார்வையாளர் சுந்தர்பாபு உள்ளிட்டோர் விளக்கிக் கூறினர். இதையடுத்து, அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னதாக, டெங்கு ஒழிப்பு குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மஸ்தூர் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.