முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்
வாக்கு எண்ணும் பணியாளர்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 18th May 2019 08:02 AM | Last Updated : 18th May 2019 08:02 AM | அ+அ அ- |

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த ஏப்.18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் இல.சுப்பிரமணியன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வீ.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.