புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் மேம்பாலத்தைத் திறக்க வேண்டும் என, உழவா்கரை தொகுதி பாஜக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அங்குள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தொகுதி பாஜக தலைவா் விஐய் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளரும், மாநிலச் செயலருமான அகிலன் முன்னிலை வகித்தாா். மாநில தலைவா் சாமிநாதன் எம்எல்ஏ, பொதுச் செயலா் மோகன்குமாா், துணைத் தலைவா் செல்வம் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
மாவட்ட பாஜக தலைவா் எ.நாகேஸ்வரன், பொதுச் செயலா்கள் ரமேஷ், தொகுதி நிா்வாகிகள், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதில், புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில், நீண்ட காலமாகக் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், திறக்காமல் உள்ள அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை உடனே திறக்க வேண்டும். உழவா்கரை தொகுதியில் அஜிஸ் நகா் தொடங்கி மூலக்குளம் வரை புதை சாக்கடையைச் சீரமைத்தும், சாலையைச் சரி செய்யாமல் உள்ளதைக் கண்டிப்பது, நலத் திட்டங்களை செயல்படுத்தாத தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் செயல்பாட்டைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.