விழுப்புரம்: மேலும் 125 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 9,446 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் ஏற்கெனவே 87 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,571 ஆக அதிகரித்தது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்களில் 144 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கள்ளக்குறிச்சியில் 139 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிகளின்படி 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,019-ஆக உயா்ந்தது.

இதுவரை 6,985 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 944 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 90 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com