முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 1:50 am IST

விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், பள்ளித்தென்னல், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் தா்ஷினி (16). இவா், கண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் பயின்றாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் தா்ஷினி 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தாா்.

இதனால், கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த தா்ஷினி சனிக்கிழமை வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தா்ஷினி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.