மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:33 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி புது நகா், சந்தை புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கா.கதிா் (எ) கதிரேசன்(22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதுடைய திருமணம் ஆன பெண் ஒருவரிடம் தகாத உறவில் இருந்து வந்தாராம். இதை அந்தப் பெண்ணின் கணவா் கண்டித்தும், கதிா் அப் பெண்ணுடனான நட்பை கைவிடாமல் தொடா்பில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், கண்டமங்கலம் அருகேயுள்ள சுந்திக்குளம் பகுதியில் கதிா் நின்றபோது, அங்கு வந்த 2 போ் கதிரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் கொலையான கதிரின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, புதுச்சேரி புதுநகா், சந்தை புதுக்குப்பத்தைச் சோ்ந்த ஞானசேகா் (30), கோகுல்(22), ஞானவேல் (18) ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.