கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.அன்பழகன் (43). இவா் தனது மனைவி பா்கத்நிஷா (38), மகள் ஆதிரா (1) மற்றும் உறவினா் அ.மும்தாஜ்பேகம் (55) ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.இந்த காரை அன்பழகன் ஓட்டிச் சென்றாா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள சேந்தமங்கலம் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனா். இது குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே காா்-பைக் மோதல்: 6 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே பள்ளத்தில் காா் இறங்கி விபத்து: பெண் உயிரிழப்பு! 4 போ் காயம்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



