"டெங்கு நோயாளிகளுக்கு சித்த மருந்து கசாயம்'
By கடலூர் | Published On : 11th December 2012 02:23 PM | Last Updated : 11th December 2012 02:23 PM | அ+அ அ- |

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, சித்த மருந்து கசாயத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர்
ராஜேந்திரரத்னூ வழங்கினார்.
÷டெங்கு காய்ச்சல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் ஏராளமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசுத் தலைமை
மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்காக தனி வார்டு
அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்
சிறப்பாக செயலாற்றி வருகிறது.
÷இந்நிலையில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் சித்த மருத்துவ குணமுடைய
நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு ஆகிய சித்த மருந்துகளை
விலையில்லாமல் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். ÷கடலூர் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைப் பெறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ஆட்சியர்
ராஜேந்திரரத்னூ திங்கள்கிழமை நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு
சாறுகளை வழங்கினார்.
÷பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: "டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு,
சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை
நவம்பர் 1-ம் தேதி முதல் காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் வழங்கி வருகிறோம். ÷இதுவரையில்
1,800 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கின்றன.
நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
÷இந்த சித்த மருந்துகளுக்கு எந்தவித பத்தியமும் இல்லை, காய்ச்சல்
இல்லாதவர்களும் நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம். கடலூர் மாவட்டத்தில்
உள்ள 8 அரசு மருத்துவமனைகள், 35 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த
மருத்துவப் பிரிவுகளில் விலையேதுமின்றி கிடைக்கும்' என ஆட்சியர் கூறினார்.
÷உடன் இணை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்
மா.மனோகரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.