காமாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு ஆராதனை

சிதம்பரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு அபிஷேக, ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு அபிஷேக, ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள காமாட்சியம்மன், அழகேஸ்வரர், விநாயகர், முருகர், விஸ்வகர்கா, காய்த்திரி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காமாட்சியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க மகளிரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மகளிரணி துணைத் தலைவர்கள் மீரா கலியமூர்த்தி, ராஜேஸ்வரி கோவிந்தராஜ், கலா நடராஜன், மல்லிகா அப்பாசாமி, கலாவதி மாரியப்பன், துணைச் செயலர்கள் லதா, தனபாக்கியம், கௌரி, மாலதி, தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகர், இளைஞரணிச் செயலர் எஸ்.ரமேஷ், தொழிற்சங்கச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com