நெய்வேலியில் சிஐஎஸ்எப் வீரர் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை மந்தாரக்குப்பம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 29-இல் வசிப்பவர் அர்சுன் செüத்ரி(26). இவர், சிஐஎஸ்எப் வீரராக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுரங்கம்-2 நிலக்கரி குவியல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வேப்பங்குறிச்சியைச் சேர்ந்த ரஞ்சிதா(25) மற்றும் இரண்டு ஆண்கள் கண்வேயர் பெல்ட் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்தனராம். அவர்களிடம் விசாரணை நடத்திய போது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து, அர்சுன்செüத்தி அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸார் ரஞ்சிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.