ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் குருபூஜை

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மௌன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மௌன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
 குருபூஜையை முன்னிட்டு, மடத்தில் உள்ள ஸ்ரீ மௌன சுவாமிகள் என்கிற ஸ்ரீ கங்காதரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான சிவனடியார்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
 முன்னதாக, சிவனடியார்கள் பங்கேற்ற திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியும், மாகேஸ்வர பூஜையும் நடைபெற்றன. மடாதிபதி ஸ்ரீமௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மதியம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com