மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கடலூர் பேருந்து நிலையத்தில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:27 am IST

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இங்குள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த பாதாம் பானம், குளிர்பான புட்டிகள்,பழச்சாறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான, சரியான லேபிள்கள் இல்லாத தின்பண்டங்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திண்பண்டங்கள், குளிர்பானங்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தப் பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.