நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

கடலூர் பேருந்து நிலையத்தில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:27 am IST

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இங்குள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த பாதாம் பானம், குளிர்பான புட்டிகள்,பழச்சாறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான, சரியான லேபிள்கள் இல்லாத தின்பண்டங்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திண்பண்டங்கள், குளிர்பானங்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தப் பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.