ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கடலூர் பேருந்து நிலையத்தில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:27 am IST

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இங்குள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த பாதாம் பானம், குளிர்பான புட்டிகள்,பழச்சாறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான, சரியான லேபிள்கள் இல்லாத தின்பண்டங்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திண்பண்டங்கள், குளிர்பானங்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தப் பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.