கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்குள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த பாதாம் பானம், குளிர்பான புட்டிகள்,பழச்சாறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான, சரியான லேபிள்கள் இல்லாத தின்பண்டங்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திண்பண்டங்கள், குளிர்பானங்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தப் பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


