மதுப் புட்டிகளை காரில் கடத்திய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இரா.வேதரத்தினம் உத்தரவின்பேரில் அமலாக்கப் பிரிவினர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையிலிருந்து வந்த காரை சோதனையிட்டதில் 10 அட்டைப் பெட்டிகளில் மதுபானம் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, கார் ஓட்டுநர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த கொளஞ்சி மகன் வெங்கடேசன் (28) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் ஓட்டி வந்த கார், அதிலிருந்த தலா 180 மில்லி கொள்ளவு கொண்ட 480 மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
தனது நண்பரின் திருமண நிகழ்ச்சி விருந்துக்காக மதுப் புட்டிகளை புதுச்சேரி கன்னிக்கோயில் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக வெங்கடேசன் தெரிவித்தாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 17,258 கோடியை ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
