மதுப் புட்டிகளை காரில் கடத்திய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இரா.வேதரத்தினம் உத்தரவின்பேரில் அமலாக்கப் பிரிவினர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையிலிருந்து வந்த காரை சோதனையிட்டதில் 10 அட்டைப் பெட்டிகளில் மதுபானம் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, கார் ஓட்டுநர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த கொளஞ்சி மகன் வெங்கடேசன் (28) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் ஓட்டி வந்த கார், அதிலிருந்த தலா 180 மில்லி கொள்ளவு கொண்ட 480 மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
தனது நண்பரின் திருமண நிகழ்ச்சி விருந்துக்காக மதுப் புட்டிகளை புதுச்சேரி கன்னிக்கோயில் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக வெங்கடேசன் தெரிவித்தாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


