சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெரியார் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி இளஞ்சியம் (65). இவரது 2-ஆவது மகன் அரங்கநாதன், சரிவர வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி பணம் கேட்டு தாயாரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இளஞ்சியம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இளஞ்சியத்தை காணவில்லையாம். இந்த நிலையில், வியாழக்கிழமை மேலகுண்டலபாடி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரை ஓரத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.