கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடலூர் அரிமா சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிவாரணப் பொருள்களை அரிமா சங்கத்தின் மாவட்ட முதல்நிலை ஆளுநர் கீதா கமலக்கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர்கள் எஸ்.முருகன், டி.ராஜமாரியப்பன், வி.சரவணன், சித்தார்த்தன், அரிமா சங்கத் தலைவர் சி.சந்திரகாசி, வர்த்தக சங்கத் தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வாய்மேடு அதன் சுற்றுவட்டக் குக்கிராமங்களில் வசிக்கும் 250 குடும்பத்தினருக்குக் கொண்டு சென்று வழங்கினர். நிகழ்ச்சியில் பவர் சிட்டி அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் லட்சுமிநாராயணன், அன்வர்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.