கீழ்புவனகிரி சௌராஷ்டிரா தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜுலு வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ரகுராமன், அருண்குமார், ராம்குமார் ஆகியோர் செய்தனர்.