பள்ளிகளுக்கு இடையே கலைப் போட்டி

சிதம்பரத்தில் ஹோட்டல் சாரதாராம் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நகரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இடையே கலைப் போட்டிக


சிதம்பரத்தில் ஹோட்டல் சாரதாராம் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நகரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இடையே கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பள்ளிகள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாறுவேடம், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். நடுவர்களாக செல்வி, மஞ்சுளா ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டல் சாரதாராம் நிர்வாக இயக்குநரும், அரிமா சங்க முன்னாள் ஆளுநருமான ஆர்.எம்.சுவேதகுமார் பரிசுகளை வழங்கினார்.
மேலும், அன்பகம் முதியோர் காப்பகம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ஏக்தா தொண்டு நிறுவனம், சிதம்பரம் காந்தி மன்றம், பழையாறு பிரின்ஸ் ஆப் பீஸ் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஜி.வி.ஸ்கூல் ஆகியவற்றுக்கு சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com