மாவட்ட பூப்பந்துப் போட்டி

 கடலூர் மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டி நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது.


 கடலூர் மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டி நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
நெய்வேலி லிக்னைட் சிட்டி கிளப் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 402 சிறுவர்கள் உள்பட மொத்தம் 786 பேர் கலந்துகொண்டனர். நடுவர்களாக பாலசுந்தரம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் செயல்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா லிக்னைட் சிட்டி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. என்எல்சி செயல் இயக்குநர் ஹேமந்த்குமார் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட பூப்பந்து நலச் சங்கத் தலைவர் முத்துக்குமரன், செயலர் ராஜேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிக்னைட் சிட்டி கிளப் செயலர் சொக்கலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ரவி கலந்துகொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com