சிதம்பரம் பகுதியில், "சிதம்பரம் ரயில்வேகேட்' என்ற திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சிவபாவலன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகர்களாக மயில்சாமி மகன் அன்பு, மாஸ்டர் மகேந்திரனும், நாயகிகளாக நீரஜா, காயத்திரி ஆகியோரும் நடிக்கின்றனர். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். படத்தை எஸ்.எம்.இப்ராஹீம் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக சிதம்பரம் நகரம், கிள்ளை எம்ஜிஆர் திட்டு, முடசல்ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாடலாசிரியர் பிரியன் பாடல்களை எழுதியுள்ளார். 1980-இல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.