உடல் தானம்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் இந்திரா நகரைச் சேர்ந்த சகுந்தலா (62) புதன்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் இந்திரா நகரைச் சேர்ந்த சகுந்தலா (62) புதன்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது. உடலானது மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி கண் வங்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
 இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சண்முகம் ஆகியோர் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com