அன்புமணி பிறந்த நாள் விழா

பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணியின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில், நெய்வேலி வட்டம் 16-இல் உள்ள நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணியின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில், நெய்வேலி வட்டம் 16-இல் உள்ள நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
 முன்னாள் மாவட்டச் செயலர் கோ.ஜெகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் முத்து.வைத்தி, முருகவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, வடக்கு மாவட்டச் செயலர் ஆறுமுகம், ஒன்றியச் செயலர்கள் செல்வக்குமார், செல்வா, என்எல்சி பாட்டாளி தொழில்சங்கத் தலைவர் செல்வராஜ், பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன், வடக்கு மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மாநில சமூக முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மாவட்ட மகளிரணிச் செயலர் சிவகாமி, முன்னாள் ஒன்றியச் செயலர் காசி.நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜ்மோகன், என்எல்சி ஒப்பந்த பாட்டாளி சங்கத் தலைவர் முருகவேல், மாவட்ட அமைப்புச்செயலர் கயல்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com