நாளை அனைத்து அரசுத் துறை பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் வருகிற 12-ஆம் தேதி  மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது பணி தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கி தீர்வு காணலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com