கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் வருகிற 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது பணி தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கி தீர்வு காணலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.