புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, புவனகிரி அருணாச்சலா பள்ளி, ஆதிவராகநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி, கள்ளிக்காடு அரசு ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புவனகிரி ரோட்டரி சங்கத் தலைவரும், காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான தமிழரசு சம்பந்தம் தலைமை வகித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆதிவராகநல்லூர் அரசுப் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலர் சேஷாத்திரி, பொருளாளர் மணவாளன், அருணாச்சலா பள்ளி செயலர் ராமலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.