சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், கிராமப்புற மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, பின்னத்தூர் மேற்கு கிராமத்தில் ரோட்டரி சமுதாயக் குழுமம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்தார். பின்னத்தூர் ஜமாத் தலைவர் முகம்மது யாசின் முன்னிலை வகித்தார். ரோட்டரி சமுதாயக் குழும தலைவராக பி.ஹிதாயதுல்லா, செயலராக ஜெகபர்அலி, பொருளாளராக கே.வரலெட்சுமி மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.பிறையோன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ரோட்டரி சமுதாய குழுமத்தின் மாவட்ட தலைவர் கே.முத்துகுமரப்பன் , ரோட்டரி துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி, சாசனத் தலைவர் பி.முகம்மது யாசின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் ராம.எஸ்டி.சுப்பையா, ஏ.விஸ்வநாதன், அக்ரி பன்னீர்செல்வம், ஏ.முகம்மது இப்ராஹிம், சங்கப் பொருளாளர் ஜி.சுனில்குமார் போத்ரா, ஏ.அபிபுல்லா, அங்கிட் ஜெயின், ஜவகர், தமிழரசன், ஜிதேந்திரகுமார், ஆர்.கோவிந்தராஜன், பி.குமார், பி.பன்னாலால், எம்.சுசில்குமார் செல்லாணி, ஆசிரியர்கள் ராஜசேகரன், ரவி, ஞானப்பிரகாசம் மற்றும் பின்னத்தூர் ஜமாத்தார்கள் பங்கேற்றனர்.
இதில் முதல் பணியாக மரக் கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை ஜி.பன்னீர்செல்வம் செய்திருந்தார். விழாவை மூத்த உறுப்பினர் ஏ.அஷ்ரப் அலி தொகுத்து வழங்கினர். சங்கச் செயலர் எஸ்.நடராஜன் நன்றி கூறினார்.