சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில், "கணக்கியலில் தரக் கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியாவில் வரி சீர்த்திருத்தம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மைய நூலக லிப்ரா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலைப்புல முதல்வர் இ.செல்வராசன் கருத்துரையாற்றி, வரி சீர்திருத்தத்தால் ஏற்படும் நன்மை, வளர்ச்சிகள் குறித்து விவரித்தார். மேலாண்மைத் துறைத் தலைவர் சி.சமுத்திரராஜ்குமார் சிறப்புரையாற்றினார். அன்னை தெரசா பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவர் டி.இரமணி, பேராசிரியர் ஜி.வசந்தி, தணிக்கையாளர் எம்.எஸ்.ரவிச்சந்திரன், ஜிஎஸ்டி ஆலோசகர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் கருத்தரங்க தலைப்புகளில் விளக்கவுரை ஆற்றினர்.துறைத் தலைவர் தி.இளங்கோவன் தலைமை வகித்தார்.
துணைப் பேராசிரியர்கள் எம்.இராஜராஜன், எஸ்.வி.முருகேசன், கே.தமிழ்செல்வன் ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். துறைப் பேராசிரியர்கள் கே.கோவிந்தராஜன், கே.பத்மநாபன், எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவு விழாவில் நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன், தொலை தூரக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கருத்தரங்கில், பல்கலைக்கழக வணிகவியல் துறை மாணவர்கள் மட்டுமன்றி கடலூர், நாகை, விழுப்பும் மாவட்ட கல்லூரிகளைச் சேர்நத 260 மாணவர்கள் கலந்துகொண்டனர்.