அரசுப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு

வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் ஆசிரியர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் ஆசிரியர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியரும், வடலூர் மாவட்டக் கல்வி(பொ) அலுவலருமான ரா.திருமுருகன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார். சக்திவேல் வரவேற்றார். விழாவில், ரூ.4.50 லட்சம் செலவில் கலையரங்கம் கட்ட நிதி உதவி வழங்கிய சவுதி-ரியாத் வாழ் தமிழர்கள் சார்பாக காமராஜ் அரங்கராஜன், அம்மையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், தமிழக அரசின் காமராஜ் விருது பெற்ற மாணவர் வசந்த், தமிழக வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்ற மாணவி பிரீத்தி ஜிந்தா ஆகியோர் கெüரவிக்கப்பட்டனர். 
மேலும், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜுலுவை மாவட்டக் கல்வி அலுவலர் ரா.திருமுருகன் கெüரவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com